உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அணித் தலைவராக தசுன் சானக்கவும், உபத் தலைவராக குசல் மெண்டிஸும் தொடரவுள்ளனர்.
அவர்களுடன், திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம (விக்கட் காப்பாளர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஸ்மந்த சமீர, கசுன் ராஜித்த, லஹிரு குமார, மஹீஸ் தீக்சன, மதீச பத்திரன மற்றும் துஸான் ஹேமந்த ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி உலகக்கிண்ணத் தாகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக நாளைய தினம் (10) சிம்பாப்வே செல்லவுள்ளது.