வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து இரண்டு பால் மா பொதிகளை களவாடியதாக கூறப்படும் 14 வயது சிறுவனை டிசம்பர் 12ஆம் திகதி வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் தனது தந்தையுடன் கொடகமவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றதாகவும், அங்கிருந்து இரண்டு பால் மா பொதிகளை களவாடிச் சென்றதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
குறித்த சிறுவனை வர்த்தக நிலையத்துக்கு அழைத்துச் சென்று பால் மா பொதியை களவாட வைத்தது அவரது தந்தையே என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.