சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கான இரகசிய முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் தலைவராக உள்ள மைத்திரிபால சிறிசேனவை பதவியில் இருந்து நீக்கி, அதற்கு சந்திரிக்காவை நியமிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்படுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் சந்திரிக்காவின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் கட்சியின் முக்கியஸ்தர்களான நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மைத்திரிபால சிறிசேனவின் மீது நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை காரணமாக முன்வைத்து அவரை பதவி நீக்குவது குறித்த திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.