பாரியளவில் உயரவுள்ள மருந்து பொருட்களின் விலை

1 year ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் ஜனவரி மாதம் மருந்து பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது நாட்டில் 80 சதவீதமான மருத்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.


அவ்வாறான மருந்து பொருட்களை எதிர்வரும் மாதங்களில் அரச மருந்து பொருள் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யவுள்ளது.


தற்போது நிலவுகின்ற நாணயப்பெறுதியின் அடிப்படையில் 7-8 மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்த விலையில் இனிவரும் காலங்களில் மருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்று, அதன் பொதுமுகாமையாளர் தினுஷா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் பெரும்பாலான மருந்து பொருட்கள் பாரிய அளவில் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.