ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அதன் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றை இலக்கு வைத்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காகச் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றிலிருந்து 40 எம்.பி.கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 40 பேரின் பெயர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.