பாராளுமன்ற அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான இன்றைய சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினை காரணமாக சபை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விவாதம் பாராளுமன்றில் நடத்தப்படுவது சட்டவிரோதமானது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுப்பதற்காகச் சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.