2022 ஜூலை மாதத்தில் அமைதியின்மையின் ஏற்பட்டு, எட்டு மாதங்களின் பின்னர், இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரசன்னமாகி விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பொதுவான இலக்கை நோக்கி அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அண்மைக் காலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்வது மிகவும் முக்கியமானது என்றும் பாராளுமன்றில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.