தொழில் வல்லுநர்கள் சம்மேளனமும் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அந்த சங்கம் அறிவித்திருந்தது.
எனினும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வழங்கப்பட்ட அறிவித்தலை அடுத்து, நாளை காலை 8 மணியுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தது.
அதன்படி இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி தொழில் வல்லுநர்களின் போராட்டம் நாளை காலை 8 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.