மீண்டும் ‘அரகலய’ புரட்சி போராட்டம் வெடிக்குமாம்

1 year ago
Sri Lanka
aivarree.com

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாவிட்டால் மீண்டும் புரட்சி போராட்டம் ஒன்று நடக்கும் என்று சுதந்திர தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

அதன் பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாக இருந்தால், அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான அணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாரிய வெற்றிபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.