தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிலிருந்து சரத் பொன்சேகா விலகல்

11 months ago
Sri Lanka
aivarree.com

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விலகியுள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை பாராளுமன்றில் இன்று அறிவித்ததுடன், அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குழுவிற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் சபைக்கு அறிவித்தார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் அம்பலப்படுத்தப்படலாம் என்பதால், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு சிபாரிசு செய்ய மாட்டோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.