இலங்கை அணியுடன் இணையும் மஹெல

11 months ago
SPORTS
aivarree.com

இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன, தேசிய கிரிக்கெட் அணியுடன் சிம்பாப்வேக்கு செல்லவுள்ளார்.

அங்கு இலங்கை கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிகாண் போட்டிகளில் விளையாட உள்ளது.

தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக இருக்கும் ஜெயவர்த்தன, சிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணி இன்று சிம்பாப்வேக்கு புறப்படவுள்ளது.

ஜூன் 13 ஆம் திகதி திட்டமிடப்பட்ட 1 வது பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக மஹேல ஜெயவர்தன அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் B குழுவில் இலங்கை உள்ளது.

ஏ பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இலங்கை முதல் ஆட்டத்தில் ஜூன் 19 திங்கட்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.