மூன்று வருடங்களின் பின்னர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொவிட் பரவலுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் புதிய படங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இதனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் அதற்குப் பின்னர் வெளியான ஜெயிபீம் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ள சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.