கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தாமதங்களுக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ஒருவாறு திரைக்கு வர உள்ளது.
சன் பிக்சர் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இது ஒரு வலுவான சமூக செய்தியுடன் கிராமத்துப் பாடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மார்ச் 10ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.