தஞ்சம் கோரி தனுஷ்கோடியை சென்றடைந்த இலங்கை குடும்பங்கள்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையைச் சேர்ந்த இரு குடும்பங்கள் கடல் மார்க்கமாகச் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐந்து பெண்களும், இரண்டு சிறுவர்களும் மற்றும் ஆண்ணொருவரும் இவ்வாறு இலங்கையிலிருந்து தனுஷ்கோடியின் மணல் மோட்டை சென்றடைந்தவர்கள் ஆவர்.

இந்த இரண்டு குடும்பங்களும் கிளிநொச்சி தருமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தமிழக கடலோர காவல் படை மற்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் தனுஷ்கோடிக்குச் செல்வதற்காக சட்டவிரோத படகு நடத்துனரிடம் 1,45,000 ரூபா கொடுத்தமையும் தெரியவந்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க ஆரம்பித்ததிலிருந்து 225 நபர்கள் சட்டவிரோதமாக தமிழ் நாட்டின் கரையை வந்தடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.