ஜே.வி.பி.யுடன் இணையவுள்ள முக்கிய கட்சி

2 years ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சி அறிவித்துள்ளது.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இதனை தெரிவித்துள்ளார்.

இன்னும் போராட்டத்தின் இடை நடுவிலேயே உள்ளது என்றும், போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் முன்னிலை சோசலிச கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக காட்டுவதற்கு முயல்கின்றனர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது, நாமும் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என குறிப்பிட்டார்.