ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னணி உறுப்பினர் ஒருவர் இன்று (14) அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று (14) பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை வலுப்படுத்தும் வகையில், அவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அரசியல் பிரமுகர் கடந்த சில அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.