ஜனாதிபதி ரணிலை சந்தித்த உலக தலைவர்கள்

2 years ago
Sri Lanka
aivarree.com

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் வானிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) அதிகாலை எகிப்திற்கு சென்றார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (07) ஸ்லோவேனியா ஜனாதிபதி பொருட் பகொரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்

மேலும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.