கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியதை அடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடத்தப்பட்டது.
இதன்போது போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும, ஆளுங்கட்சியில் இருந்து விலகிய 10க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அணி ஒன்றுக்கு தலைமை தாங்குகிறார்.
தற்போது அந்த அணியில் பெரும் பிளவு உருவாகி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தேர்தலில் எந்த அணியுடன் இணைவது என்ற விடயத்தில் இந்த பிளவு உருவாகியுள்ளது.
சஜித் உடன் இணைய வேண்டும் என்று ஒரு அணியும், விமல் வீரவன்சவின் அணியில் இணைய வேண்டும் என்று இன்னொரு பிரிவும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.