கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் இவ்வாறு உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றினால் நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
இதற்கமைவாக இந்நாட்டில் இதுவரையில் குறித்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இன்றைய தினம் மேலும் 1137 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.