ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க இலங்கையில் பெண்கள் கிரிக்கெட்டிற்கான மேம்பாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டப்போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனையாகவும் சுசந்திகா விளங்குகிறார்.
இவரது சேவை இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.