கொவிட்-19 தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெறுவோர் கடுமையான பாதிப்பு இல்லையெனில் வைத்திய ஆலோசனைகளை பெறத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
வைத்திய ஆலோசகர் சரத் காமினி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் நோயாளிகள் அதிக ஓய்வு எடுப்பதோடு அதிக வேலைப்பளுவை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் திரவ உணவை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.