ஏப்ரலில் அரைசொகுசு பேருந்துகள் இரத்து

1 year ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதியிலிருந்து அரைசொகுசு பேருந்து சேவைகள் இரத்து செய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரை சொகுசு மற்றும் சாதாரண பேருந்துகளுக்கு இடையிலான கட்டண வேறுபாடுகளினால் பயணிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.