எரிபொருள் விலை சூத்திரம் மற்றமா? | அமைச்சர் விளக்கம்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் எரிபொருள் விலை சீரமைப்புக்கான சூத்திரம் மீண்டும் அமுலாக்கப்பட்டு வருகிறது. 

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2018ஆம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே இனி எரிபொருள் விலை கணிப்பிடப்படும் என அறிவித்திருந்தார். 

நல்லாட்சி காலத்தில் 2018ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மறைந்த மங்கள சமரவீரவினால் இந்த விலைசூத்திரம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக எதிரணி நேற்று (23) பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய போது, எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றமில்லை என்றும், மாறாக அதனை கிரமமான முறையில் அமுலாக்குவதையே ஜனாதிபதி குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார். 

இதுவரையில் மாதாந்தம் முதலாம் திகதி அளவில் இந்த விலை சூத்திரம் அமுலாக்கப்பட்டு வந்தபோதும், இனியும் மாதம் தவறாமல் அதனை முறையாக அமுலாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.