கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (மார்ச் 25) 10 மணிநேரம் தடை செய்யப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நீர் விநியகம் தடை செய்யப்படவுள்ளது.
அத்தியாவசியப் பரமாரிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
நீர் வெட்டு அமுலாகும் இடங்கள் :
- கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவலை நகர சபை பகுதிகள்
- மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவை நகர சபை பகுதிகளில்
- கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரேதச சபை பகுதிகள்
- இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகள்