எரிபொருள் தொடர்பாக CPC வெளியிட்டுள்ள அறிவிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் பல்வேறு இடங்களில் எரிபொருள் கிடைக்கப்பெறாததால், எரிபொருளுக்கான வாகன வரிசை நீண்டு செல்கிறது. 

ஆனால் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. 


எதிர்வரும் 15 நாட்களுக்குப் போதுமான அளவு நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் எரிபொருள் ஏற்றிய பல கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவை மேற்கொள்ளாமையே இந்த தட்டுப்பாடுக்கு காரணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.