பதவி விலகும் 4 அமைச்சர்கள் | SJBயின் 10 பேர் அரசுடன்

1 year ago
Gossip
aivarree.com

அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கின்ற நான்கு பேர், தமது பதவிகளிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ உள்ளிட்ட நான்கு பேர் இவ்வாறு பதவி விலகவிருப்பதாக கூறப்படுகிறது.


அவர்கள் தனியான அரசியல் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காக, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிதாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.