கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக நிலவிவநத வறட்சியான வானிலையில் இந்த வாரம் மாற்றம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வரும் நாட்களில் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படும் அதேநேரம், ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.
அதேநேரம் ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.