இந்தியாவில் இருந்து 1000 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது.
2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான இயலுமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஆய்வு அறிக்கையை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இரண்டு தரப்பும் இணக்கம் கண்டிருப்பதாக த மோர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இணைப்புகள் வழங்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் காலகட்டம் 2022-2041 வரையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.