ரயில்வே திணைக்களத்தில் 3000 வேலை வாய்ப்புகள்

1 year ago
Sri Lanka
aivarree.com

ரயில் சேவைகளை சீரமைக்க ரயில்வே திணைக்களம் 3,000 பேரை ரயில்வே உதவியாளர்களாக உள்ளீர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் அரச சேவைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழுவில் இருப்பவர்கள், ரயில்வே திணைக்களத்தின் கீழ் ஓய்வூதியத்துடன் கூடிய அரசாங்கப் பணியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதி நெருக்கடியின் மத்தியிலும், ரயில்வே திணைக்களத்தில் முக்கியமான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.