ஆற்றுக்கருகில் மர்மமாக மரணித்த யுவதி | பொலிஸார் தீவிர விசாரணை

1 year ago
Sri Lanka
aivarree.com

எலபாத பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள நீரோடைக்கு அருகில் குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தினம், தனது மகள் காணாமல் போனதாக உயிரிழந்த யுவதியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அம் முறைப்பாட்டுக்கிணங்க தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்த போதே யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை எலபாத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.