அடுத்த 6 ஆண்டுகள் தீர்க்கமானவை | குமார் சங்கக்கார (வீடியோ)

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கைக்கு அடுத்த 6 ஆண்டுகள் தீர்மானமிக்கவை என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Oxford ஒன்றியத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் தெரிவித்த முக்கியமான விடயங்கள் சுருக்கமாக அய்வரி வாசகர்களுக்காக:-

  • காலிமுகத்திடல் புரட்சி போராட்டம், இளைஞர்கள் இலங்கை அரசியல் குறித்து எந்தளவு தெளிவினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளச் செய்தது.
  • அவர்கள் ஊழல்கள் மோசடிகள் நிறைந்த அரசக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதுடன், இதில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
  • தற்போது இளைஞர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்.
  • அவர்கள் நினைக்கின்ற மாற்றத்தை ஏற்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும் என்பதோடு, அதற்கான அடித்தளத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
    தனிப்பட்ட வகையில் என்னால் அதனை செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
  • ஆனால் இந்த மாற்றங்களை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
  • அதனை அந்த இளைஞர்கள் செய்வார்கள்.
  • அவர்களை நடப்பு அரசியலுக்குள் எவ்வாறு ஈர்த்துக் கொண்டு, மாற்றங்களை ஏற்படுத்த வழிசமைக்க முடியும் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
  • இது ஒரே இரவில் நடைபெறுகின்ற விடயம் இல்லை.
  • எதிர்வரும் 6-10 வருடங்களில் இந்த விடயத்துக்கு பதிலளிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
  • இது இப்போது இருப்பதைவிட கடினமானதாக இருக்கப்போகிறது.