ஆரம்ப வீரர்களான திமுத், மதுசங்க சதம் | 228 ஓட்டங்களுடன் இலங்கை

1 year ago
SPORTS
aivarree.com

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் சதங்களை பெற்றுள்ளனர்.

இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டி திங்கட்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 492 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நேற்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நிஷான் மதுசங்க 41 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க 41.1 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 16 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

பின்னர் 47 ஆவது ஓவரின் நிறைவில் நிஷான் மதுசங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பெற்றார்.

தொடர்ந்தும் இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடும் போது, திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் மதிய நேர உணவு இடைவேளை ஆரம்பிக்க இலங்கை 228 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில் இருந்தது.

TSN NEWS