வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2 months ago
Sri Lanka
aivarree.com

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 1.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையான காலப்பகுதி வரை செம்மஞ்சள் நிறத்துடன் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.