கொழும்பு தர்ஷ்டன் கல்லூரி சுற்றுலா பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளான வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த 7 பேர் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களின் விபரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆண்களும், ஒரு பெண்ணும், 3 சிறார்களுமாக 6 பேரும், முச்சக்கர வண்டி சாரதியும் பலியாகினர்.
பலியான சிறார்களில் 13 வயதான ஆணும், 8 மற்றும் 12 வயதான இரண்டு பெண் சிறுமிகளும் அடங்குகின்றனர்.
வேனில் பயணித்த 26, 27 வயதான இரண்டு ஆண்களும், 43 வயதான பெண்ணுமே பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.