ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.