மின் கட்டண உயர்வுக்கு மின்சார பாவனையாளர் சங்கம் கடும் கண்டனம்

8 months ago
Sri Lanka
aivarree.com

மீண்டும் மின் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம் மின்சார சபையின் திறமையின்மையை எடுத்துக் காட்டுவதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்துவதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

தொடரும் கன மழை காரணமாக அதிக நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முறையாக நிர்வாகிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாது மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் செயல் கேலிக் கூத்தானது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.