இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கையின் பந்து வீச்சுக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 22.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபடியாக மொஹமட் நபி 23 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 22 ஓட்டங்களையும், குல்பாடின் நைப் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளையும், வர்னிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் மற்றும் மகேஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்காக 117 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.