இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
பின்னர் இரண்டாவது போட்டியில் இலங்கை 132 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர் 1:1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் மூன்றாவது போட்டி, தொடர் யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியாக அமைந்துள்ளது.