அரச பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

2 weeks ago
Sri Lanka
aivarree.com

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன் படி பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி வரை க.பொ.த சாகதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

மேலும் மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.