காவல்துறை பணியாளர் மீது துஷ்பிரயோகம்; சந்தேக நபர் கைது

3 months ago
Sri Lanka
aivarree.com

சிறுவர் மற்றும் பெண்கள் தலைமை பணியகத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் கூட்டுத்தாபனத்தில் எழுத்தாளராக கடமையாற்றும் 43 வயதுடைய பாதுக்க மதுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பணி இடைவேளைக்கு அறிவித்து விட்டு கொழும்பில் இருந்து பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போதே குறித்த நபர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.