மா ஓயாவில் நீராடச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு

2 months ago
Sri Lanka
aivarree.com

அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் குழுவொன்று குறித்த நீரோடையில் நீராடச் சென்றபோதே அவர்களில் நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை காப்பாற்றப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.