சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) 2024 டி-20 உலகக் கிண்ணத்தை மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் இந்த தகவலில் எதுவும் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
போட்டியை நடத்துவதற்கு மேற்கண்ட நாடுகளின் ஆயத்தமின்மை காரணமாக புதிய இடத்திற்கு போட்டி மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், 2024 டி:20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்தில் நடத்துவதற்கு ஐ.சி.சி. கட்டாயப்படுத்தலாம் என்று ‘News18 CricketNextreport’ திங்களன்று கூறியுள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவை 2030 டி:20 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமையைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.