பல மாத ஊகங்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஒகஸ்ட்-செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தானின் கலப்பின மாதிரி முன்மொழிவனை ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் 2023 ஆசியக் கிண்ண போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடப்படும்.
இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும்.
இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் இலங்கையில் நடைபெறும்.
“2023 ஆசிய கிண்ணம் எதிர்வரும் ஒகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மொத்தம் 13 பரபரப்பான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும்” என்று ACC வியாழக்கிழமை (15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆசியக் கிண்ண சீசன் இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
முன்னதாக மே மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கூறிய கலப்பின மாதிரியை முன்மொழிந்து தொடரை நடத்துவதற்கான கடைசி முயற்சியை மேற்கொண்டது.
முன்மொழிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டியை இரண்டு கட்டங்களாக நடத்த விரும்பியது – முதல் கட்டம்: இந்தியாவைத் தவிர அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் குறைந்தது ஒரு போட்டியையாவது விளையாட வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில்: போட்டியின் எஞ்சிய பகுதி UAE அல்லது பிற நடுநிலை மைதானத்தில் இந்தியா விளையாடலாம்.
இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டால், போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அச்சுறுத்தியது.
ACC பாகிஸ்தானுக்கான ஹோஸ்டிங் உரிமையை வழங்கியதிலிருந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களினால் அண்டை நாட்டிற்கு செல்ல மறுத்துவிட்டது.