10 அமைச்சர்கள் இந்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அமைச்சு பதவிகளை பெறவிருக்கின்றவர்களுக்கும் இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சுப் பதவிகளை வழங்கும் நடவடிக்கை காலவரையறை இன்றி பிற்படப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அமைச்சுப்பதவி வழங்கப்படாமைக்கான காரணத்தை கோரியுள்ளனர்.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு IMF கடனுதவி கிடைக்கப்பெறும் வரையில் அமைச்சு பதவிகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.