யாப்பாணத்தில் பதட்டம்

1 year ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம் – அரசடி சந்தியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிசார் தண்ணீர் பீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது ஒருவர் காயமடைந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.