மின்வெட்டுக்கு அனுமதி கோரப்படவில்லை /PUCSL

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கை மின்சார சபை இன்று இதுவரையில் மின்தடை மேற்கொள்வதற்கு அனுமதி கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இன்றைய நாளுக்கான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் இயலுமை மின்சார சபைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் கடந்தவாரம் அனுமதி இன்றி மின்சாரத்தை துண்டித்தமைக்காக இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter