மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் / தேர்தல் முறைத் திருத்தக் குழு தீர்மானம்

2 years ago
Sri Lanka
aivarree.com

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்துவதற்கு, தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் தினேஸ்குணவர்தனவின் தலைமையில் கடந்த வாரம் கூடிய இந்த குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக, அதன் உறுப்பினர் மனோகணேசன் அய்வரி செய்திகளுக்குப் பிரத்தியேகமாகத் தெரிவித்தார். 

எனினும் இந்த தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், எதிர்வரும் 22ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் இந்த குழு மீண்டும் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் தகவல் வழங்கினார்.


இதேவேளை, இந்த குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குப் புறம்பாகவே அதன் உத்தியோகபூர்வ அறிக்கைகள் அமைந்திருப்பதாகவும், இதுகுறித்து அடுத்த கூட்டத்தில் பிரஸ்தாபிக்கவிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 


இதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை பங்குனி மாதம் நடத்தவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்ட போதும், அதற்குப் புறம்பான அறிவிப்பை இந்த குழு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.