மனோ கணேசனின் முயற்சியை தமிழரசு கட்சி பரீசீலிக்கும் | எம்.ஏ.சுமந்திரன்

1 year ago
Sri Lanka
aivarree.com

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை அமைப்பதற்கு சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கோரி இருந்தார்.

இதுதொடர்பாக மனோகணேசனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த யோசனை தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்தாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மனோகணேசனின் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருந்து தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ப்ளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.