தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை 24ம் திகதி 2 மாவட்டங்களில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மதுவரி திணைக்களம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன்படி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் மதுபானசாலைகள் 24ம் திகதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.