நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலக்கரி ஏற்றுமதியின் மூலம் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை தொடர்ந்து இயக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தை வரும் 30 நாட்களுக்கு இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது.
2022 டிசெம்பர் வரை மேலும் 4 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.